என்னப்பா இது!!!?

மேற்கு வங்கத்தில் தேர்தல் ஆணையம், மமதா பேனர்ஜிக்கு கடந்த ஏப்ரல் 12 அன்று, 24 மணி நேரம் பிரச்சாரம் செய்ய தடை விதித்திருந்தது. இதனைத் தொடர்ந்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் தனது தலைசிறந்த ஓவியப்படைப்புகளை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டார். 24 மணி நேர தடை முடிந்து அவர் வழக்கம்போல பிரச்சாரத்துக்கு கிளம்பிவிட்டார். என்றாலும், அவரது ஓவியம் தற்போதுவரை இணையத்தில் வைரலாகி, நெட்டிசன்கள் கிண்டலடிக்க முக்கிய தலைப்பாக இவரது படைப்புகள் இருந்து வருகின்றன. மமதா வெளியிட்டுள்ள அவர் வரைந்த ஒரு ஓவியத்தை என்னவென்று புரியாமல், இது ஒரு தீய்ந்த பிரெட், புகைபிடிப்பவரின் கெட்டுப்போன நுரையீரல், எப்படி திருப்பிப் பார்த்தாலும் புரியவில்லையே என தலையை சொறிந்துகொள்கிறார்கள் நெட்டிசன்கள். உங்களுக்காவது இது என்னவென்று புரிகிறதா, கொஞ்சம் பார்த்து சொல்லுங்களேன்!!!