பா.ஜ.க வேட்பாளர் கடத்தப்பட்டாரா?

மேற்கு வங்கத்தில் நடைபெற்ற இரண்டாம் கட்ட தேர்தல் ஓட்டுப்பதிவின்போது மமதா போட்டியிடும் மேற்கு வங்கம் உட்பட பல இடங்களில், தோல்வி பயத்தால், திருணமூல் கட்சி குண்டர்களால் பல இடங்களில் வன்முறைகள் நிகழ்த்தப்பட்டன. அங்கு, ‘மேற்கு மித்னாபூர் மாவட்டத்தின் கேஷ்பூரைச் சேர்ந்த பா.ஜ.க வேட்பாளர் பிரிதிஷ் ரஞ்சன் குவார் தாக்கப்பட்டார். அவரது வாகனமும் உடன் வந்த தொண்டர்களும் தாக்கப்பட்டன. இந்நிலையில், அவரைக் காணவில்லை என சொல்லப்படுகிறது. அவரது அலைபேசி சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. தாக்குதல் நடைபெற்ற கிராமத்தில் காவல்துறையினர் அவரை தேடிவருகின்றனர் என ஏசியாநெட் நியூஸ் பங்களா தெரிவித்துள்ளது.