துணை வேந்தர் உயிருக்கு ஆபத்து

மேற்கு வங்கத்தில் உள்ள புகழ் பெற்ற விஸ்வ பாரதி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பித்யுத் சக்ரவர்த்தி, பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘மேற்கு வங்கத்தில் வாக்கெடுப்பு முடிந்ததும்,  நீ மிக மோசமான பிரச்சனைகளை சந்திப்பாய்’ என திருணமூல் கட்சித் தலைவர் அனுப்ரதா மொண்டல் தன்னை மிரட்டியதாக குற்றம் சாட்டியுள்ளார். தற்போது, துணைவேந்தருக்கு மாநில அரசு பாதுகாப்பு அளித்துள்ளது. ஆனால் அதில் நம்பிக்கை இல்லாத்தால், அவர், தனக்கும் தன் குடும்பத்திற்கும் பாதுகாப்பை அதிகரிக்குமாறு பிரதமரிடம் கோரிக்கை வைத்துள்ளார்.