ஆனந்தம் – மகிழ்ச்சிக்கான மையம்

இந்திய மேலாண்மை கல்வி நிறுவனமான ஐ.ஐ.எம் ஜம்முவில், ஆனந்தம் மகிழ்ச்சிக்கான மையத்தை மத்திய கல்வி அமைச்சர் ஸ்ரீ ரமேஷ் போக்ரியால் நிஷாங்க் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இதில், ஜம்மு-காஷ்மீர் துணைநிலை ஆளுனர் மனோஜ் சின்ஹா,  ஆர்ட் ஆப் லிவிங் அறக்கட்டளையின் நிறுவனர்  ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் ஐ.ஐ.எம் ஜம்மு ஆளுநர் குழு தலைவர் டாக்டர் மிலிந்த் காம்ப்ளே உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆலோசனை, முழுமையான ஆரோக்கியம், மகிழ்ச்சி மேம்பாடு, ஆராய்ச்சி, தலைமைத்துவம் மற்றும் ஆசிரிய மேம்பாடு குறித்த தேர்ந்தெடுக்கப்பட்ட படிப்புகள் என ஐந்து பரந்த பிரிவுகளாக இந்த மையத்தின் பிரதான நடவடிக்கைகள் இருக்கும்.