ஆ.ராசா பிரசாரம் செய்ய தடை

முதல்வர் பழனிசாமியின் தாயார் குறித்து இழிவாக பேசியதற்காக திமுக எம்பி ஆ.ராசாவுக்கு 48 மணி நேரத்திற்கு பிரசாரம் செய்ய தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. மேலும், ‛ராசாவின் பேச்சு கண்ணியக் குறைவாக மட்டும் அல்ல தாய்மையை இழிவு செய்யும் வகையில் உள்ளது. இனி அநாகரீகமாகவோ, ஆபாசமாகவோ, பெண்களின் கண்ணியத்தை குறைக்கும் வகையிலோ ஆ.ராசா பேசக்கூடாது’ எனக்கூறியுள்ளதுடன் அவரை, தி.மு.கவின் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் இருந்தும் நீக்கியது.