துவங்கியது வன்முறை

மேற்கு வங்கத்தில் தங்கள் கட்சி வெற்றி பெற்ற உடன் அங்கு திருணமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த குண்டர்கள் கொல்கத்தா, அரம்பாக்கில் உள்ள பா.ஜ.க கட்சி அலுவலகத்தை தீ வைத்து எரித்துள்ளனர் என டி.வி9 தொலைக்காட்சி செய்தி ஒன்று தெரிவிக்கிறது. இதனை மறுத்துள்ள திருணமுல் கட்சியினர் அங்கு வெடித்த பட்டாசுகள்தான் இதற்கு காரணம். இது ஒரு தீ விபத்துதான் என கூறியுள்ளனர். மேலும் அங்கு பெலியகட்டா சட்டமன்றத் தொகுதி 30வது வார்டு பா.ஜ.க. பொறுப்பாளர் அபிஜித் சர்க்கார் திருணமுல் குண்டர்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.