மலர்ந்தது தாமரை

நடந்து முடிந்த தமிழக சட்டசபைக்கான தேர்தலில், தமிழகத்தில் நாகர்கோயில் தொகுதியில் எம்.ஆர்.காந்தி, நெல்லையில் நயினார் நாகேந்திரன், கோவை தெற்குத் தொகுதியில் வானதி சீனிவாசன், மொடக்குறிச்சி தொகுதியில் சி.கே சரஸ்வதி ஆகியோர் பா.ஜ.க சார்பில் போட்டியிட்டு வெற்றிப்பெற்று சட்டசபை செல்ல உள்ளனர்.

புதுவை சட்டசபைத் தேர்தலில் மனவெளி தொகுதியில் ஏம்பலம் ஆர். செல்வம், காலாப்பட்டு தொகுதியில் பி.எம்.எல் கல்யாண சுந்தரம், காமராஜ் நகரில் ஏ. ஜான்குமார், ஊசுடு தனித் தொகுதியில் சாய் ஜெ சரவணகுமார், நெல்லித்தோப்பில் விவியன் ரிச்சர்ட்ஸ் ஜான் குமார், மண்ணாடிப்பட்டில் ஏ. நமச்சிவாயம் ஆகியோர் பா.ஜ.க சார்பில் போட்டியிட்டு வெற்றிப்பெற்று ஆளும் என்.ஆர் காங்கிரஸ், பா.ஜ.க கட்சி கூட்டணியினராக சட்டமன்றத்தை அலங்கரிக்க உள்ளனர்.

வாழ்த்துகள்…