தடுப்பூசி மிரட்டல்கள்

கொரோனா தடுப்பூசிகளில் ஒன்றான கோவி ஷீல்ட் தடுப்பூசியை தயாரிக்கும் சீரம் இன்ஸ்டிடியூட்டின் தலைவர் அதார் பூனவல்லாவுக்கு பல்வேறு மிரட்டல்கள் வந்ததால் மத்திய அரசு அவருக்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பளித்துள்ளது. ‘ஆதார் பூனவல்லாவுக்கு, ராகுல் காந்தி உள்ளிட்ட பல எதிர்க்கட்சித்தலைவர்களால் தொடர்ந்து அச்சுறுத்தல்கள் வருவதால் அவர் தற்காலிகமாக நாட்டைவிட்டு வெளியேறி இங்கிலாந்துக்கு சென்றுள்ளார். அவருக்கு அச்சுறுத்தல் விடுக்கும் மற்றொரு மிக சக்திவாய்ந்த தலைமை சிவசேனாவைத் தவிர வேறு யாருமல்ல’ என இந்தியா டுடே பத்திரிகையாளர் ராகுல் கன்வால் தெரிவித்துள்ளார். மேலும், சிவசேனாவின் சில உள்ளூர் தலைவர்கள் தடுப்பூசியை எங்களுக்குத்தான் முதலில் தரவேண்டும் என மிரட்டல்கள் வந்த சில வீடியோக்களை அதார் பூனவல்லா ராகுல் கன்வாலுக்கு அனுப்பியுள்ளார். அவருக்கு தொடர்ந்து பல்வேறு தொலைபேசி மிரட்டல்கள் வந்த வண்ணம் உள்ளதை அதார் பூனாவாலா சமீபத்தில் ஒப்புக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.