தடுப்பூசி பாரதம் முதலிடம்

பாரதத்தில் கொரோனா தொற்று மீண்டும் வேகமெடுத்துள்ள நிலையில், தொற்றுக்கு எதிராக தடுப்பூசி போடும் பணிகளும் மின்னல் வேகத்தில் நடைபெற்று வருகின்றன. அவ்வகையில், நாள்தோறும் போடப்படும் தடுப்பூசி டோஸ்களின் சராசரி எண்ணிக்கை 30,93,861 ஆக அதிகரித்துள்ளது. இதன் மூலம் வேகமாக தடுப்பூசி போட்டு வரும் நாடுகளில் அமெரிக்கா உட்பட அனைத்து நாடுகளையும் பின்னுக்குத்தள்ளி உலகில் முதலிடத்தை பாரதம் பிடித்திருக்கிறது. மேலும், மருந்து உற்பத்தியை அதிகரிக்க மிக வேகமாக அரசு பல முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது. இதெல்லாம் தெரிந்திருந்தும், காங்கிரஸ் கட்சியினர் அவ்வப்போது சில அறிக்கைகள், ஆலோசனைகள் அளிக்கிறேன் பேர்வழி என தாங்களும் அரசியலில் இருக்கிறோம் என்பதைக் காட்டிக்கொள்ள முனைகின்றனர். சமீபத்தில் சோனியா, ராகுல், மன்மோகன் சிங் போன்றோர் வெளியிட்டுள்ள அரைவேக்காட்டு அறிக்கைகளே இதற்கு சாட்சி.