சேவையே இன்றையத் தேவை

சேவையையும் தேசபக்தியையும் இருகண்களாக போற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காலத்தில் செய்த மக்கள் தொண்டுகள் போலவே தற்போதும் பாரதம் முழுவதும் தங்கள் மக்கள் தொண்டை தொடர்ந்து வருகின்றனர். மத்தியபிரதேசம் மாநிலத்தில் உள்ள போபாலில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்கு வீடு வீடாக சென்று உதவி செய்துவரும் ஆர்.எஸ்.எஸ் ஸ்வயம்சேவகர்கள். தாம்பரத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் கபசுர குடிநீர் தயாரித்து 1500 நபர்களுக்கு வழங்கினர்.