நர்கோ பயங்கரவாதம்

பப்பர் கல்சா இன்டர்நேஷனல் (பி.கே.ஐ) உடன் தொடர்புடைய குரு பிரதாப் சிங், பிஷன் தாஸ் உள்ளிட்ட ஏழு போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிராக என்.ஐ.ஏ ஜம்மு சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. ஆர்.எஸ்.புரா, ஜம்மு அருகேயுள்ள சர்வதேச எல்லையில், கடந்த 2020 செப்டம்பர் 20 அன்று அதிகாலையில் இவர்களிடம் இருந்து 61 கிலோ ஹெராயின், 1.2 கிலோ ஓபியம், 2 கைத்துப்பாக்கிகள், 100 குண்டுகள் கைப்பற்றப்பட்டன. இந்த போதைப்பொருட்கள் விற்பனையால் கிடைக்கும் வருமானம் பி.கே.ஐயின் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படவிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.