மகாராஷ்டிராவில் யுரேனியம் சிக்கியது

மகாராஷ்டிரா பயங்கரவாத தடுப்புப் பிரிவின் (ஏ.டி.எஸ்) நாக்பாடா பிரிவு கடந்த புதன்கிழமை இரவு அபு தாகீர், ஜிகர் பாண்டியா என்ற இருவரை கைது செய்து அவர்களிடமிருந்து சுமார் 21.30 கோடி ரூபாய் மதிப்புள்ள மனித உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தக்கூடிய 7.1 கிலோ இயற்கை யுரேனியத்தை பறிமுதல் செய்தது குறித்து தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) மகாராஷ்டிரா பயங்கரவாத எதிர்ப்புப் படையிடமிருந்து (ஏ.டி.எஸ்) விரிவான தகவல்களை கோரியுள்ளது.