தொழிற்சங்கத் தலைவர் கைது

சிவகங்கை மாவட்டம் நாச்சியார்புரத்தில் கதிர்வேல் டெக்ஸ்டைல் மில்லில் இருந்த ரூ. 2 கோடி மெஷினை சிலர் கொள்ளையடித்து சென்றனர். இது தொடர்பாக காவல்துறையினர் அந்த மில்லின் ஊழியர்கள் காண்டீபன், ராகவன், கணேசனை கைது செய்தனர். பின்னர் இவ்வழக்கு சிவகங்கை சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றப்பட்டது. விசாரணையில் இந்த மெஷின் கொள்ளையில் காங்கிரஸ் கட்சியின் கீழ் இயங்கும் ஐ.என்.டி.யு.சி தொழிற்சங்கத்தின் மாநில செயலாளர் களஞ்சியம் என்பவருக்கும் தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து தலைமறைவாக இருந்த களஞ்சியத்தை சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர் கைது செய்தனர்.