மத்திய அரசுக்கு நீதிமன்றம் பாராட்டு

கொரோனாவால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு 50 ஆயிரம் இழப்பீடு வழங்குவது தொடர்பான மனுவை விசாரித்து வரும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, போபண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு,’ கொரோனாவால் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் இழப்பீடு வழங்கப்பட உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இது பல குடும்பத்தினரின் கண்ணீரை துடைக்கும். பாரதம் போன்ற மக்கள் தொகை அதிகம் உள்ள நாடுகளில் இழப்பீடு வழங்குவது எளிதல்ல. பாரதம் செய்துள்ளதை மற்ற நாடுகளும்கூட செய்யவில்லை. இதற்காக மத்திய அரசை பாராட்டுகிறோம்’ என்று தெரிவித்தனர்.