கோயில் தேரை எரிக்க முயற்சி

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே வி. களத்தூர் கிராமத்தில் உள்ள கோயிலின் இரண்டு தேர்களை கொளுத்த வாலிகண்டபுரம் கிராமத்தைச் சேர்ந்த முஹம்மது ஷான் என்ற முஸ்லிம் இளைஞர் ஒருவர் முயற்சித்தார். அவரை கையும் களவுமாக பிடித்தபோது, ‘கோர்ட் ஆர்டர் கொடுத்தும் தேர் ஓடவில்லை என்பதால் தேரை தீயிட்டு கொளுத்த வந்தேன் என்று குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

மேலும், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அதே கோவிலில் உள்ளே சாமி பொருட்கள் வைக்கும் மண்டபத்தை நான் தான் கொளுத்தினேன் என்றும் ஒப்புக்கொண்டார். பொதுமக்கள் பிடித்துக் கொடுத்தும் அந்த முஸ்லிம் நபரை விடுவிக்கும் வகையில், அவரை பைத்தியம் என்று கூறி, தீ வைக்க முயற்சித்த சம்பவத்தை திசை திருப்ப காவல்துறை முயற்சி செய்தது.

அந்த முஸ்லிம் இளைஞர் இப்படி திமிராக பேசுவதும், காவல்துறை அவரை விடுவிக்க முயற்சிப்பதும் இதன் பின்னணியில் பெரிய சக்திகள் ஒளிந்திருப்பதையே நிரூபிக்கின்றன. அந்த முஸ்லிம் இளைஞரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கோரி இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.