பி.எம் கேர்ஸ் அரசு நிதி அல்ல

பி.எம்., கேர்ஸ் அறக்கட்டளை நிதி தணிக்கை தொடர்பான வழக்கில் பதில் அளித்துள்ள பி.எம்., கேர்ஸ் அறக்கட்டளை, ‘பி.எம்., கேர்ஸ் நிதிக்கு பெறப்படும் நன்கொடைகள் அனைத்தும் ஆன்லைன், காசோலைகள், வரைவோலைகளாக மட்டுமே பெறப்படுகின்றன. அவை பட்டைய கணக்காளர் உதவியுடன் தணிக்கை செய்யப்பட்டு இணையதளத்தில் வரவு செலவு கணக்குகள் முறையாக தாக்கல் செய்யப்படுகின்றன.

இந்த அறக்கட்டளையின் நிதி, மத்திய அரசின் நிதி அல்ல. இதில் வசூலிக்கப்படும் தொகை, மத்திய அரசின் ஒருங்கிணைந்த நிதியத்துக்கு செல்வதில்லை. மக்களவை, மாநிலங்கள் அவை அல்லது மாநில சட்டசபைகளால் நிறைவேற்றப்பட்ட சட்டத்தினாலோ, அரசியலமைப்பு விதிகளின்படியோ இந்த அறக்கட்டளை நிறுவப்படவில்லை. இது மற்ற அறக்கட்டளை ளை போன்றதொரு தொண்டு நிறுவனம்தான்’ என்று தெரிவித்துள்ளது.