சேவாபாரதி தென்தமிழக பொறுப்பாளர்கள்

சேவாபாரதி தென் தமிழகத்தின் மாநில செயற்குழு கூட்டம் கடந்த 23 செப்டம்பர் 2021ல் மதுரை மாதா அமிர்தனந்தமயி மடத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அரங்க ராமநாதன் தலைமை தாங்கினார். பூஜ்ய ஸ்வாமி ஸ்வரூபானந்தா சிவானந்த ஸத்சங்கபவன், மதுரை கல்லூரி செயலாளர் S.நடனகோபால் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்கள். இதில் மாநில நிர்வாகிகள் பொறுப்பேற்றனர்.

புரவலராக வெள்ளிமலை பூஜ்ய ஸ்வாமி சைதன்யானந்த மகராஜ், அரங்க ராமநாதன் கௌரவ தலைவராகவும் பொறுப்பு ஏற்றனர். அதனைத் தொடர்ந்து, மாநிலத்தின் புதிய தலைவராக மதுரை ராஜாஜி மருத்துவமனையின் முன்னாள் துறைத் தலைவராகவும், பல சேவை பணிகளை ஆற்றிவருபவருமான டாக்டர் S வடிவேல் முருகன் பொறுப்பேற்றுக்கொண்டார்.