எம்.எல்.ஏ விட்டில் 11 கோடி

மேற்கு வங்கத்தை ஆளும் திருணமூல் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ஜாகீர் ஹுசைனின் முர்ஷிதாபாத் வீடு, அலுவலகம் மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரி துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இரண்டு நாட்களாக நடைபெற்ற இந்த சோதனையில் கணக்கில் வராததாக கருதப்படும் ரூ.11 கோடி பணத்தை வருமான வரி துறை அதிகாரிகள் கைப்பற்றினர். இது குறித்து ஜாகீர் ஹுசைனிடம் விசாரணை நடப்பதாக வருமான வரி துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.