இதுதான் தி.மு.க மாண்பு

முதல்வர் எடப்பாடியாரின் தாயார் குறித்த ஆ. ராசாவின் அறுவருக்கத்தக்க பேச்சையடுத்து பொதுமக்களின் கோபம் தி.மு.கவினர் மீது திரும்பியுள்ளதை ஆங்காங்கு நடைபெற்று வரும் போராட்டங்கள் நன்றாகவே உணர்த்தியுள்ளன. இந்நிலையில், ‘ஜெயலலிதா அம்மா, மோடி அப்பா என்றால் என்ன உறவுமுறை?’ என்ற  தயாநிதிமாறனின் அடுத்த சர்ச்சை பேச்சு, தி.மு.கவில் தலைவர் முதல் அடிமட்டத் தொண்டன்வரை ஒரு வித்து கூட உருப்படியான வித்து கிடையாது. ஒரே ஒரு நல்ல ஒழுக்கமான தலைவனை கூட அங்கு பார்க்க முடியாது. பேராசை பிடித்த கும்பல் மட்டுமே தன் சுய லாபத்திற்காக தி.மு.கவிற்கு ஆதரவாக இருப்பார்கள், யோக்கியமான யாரும் அதனை சீண்டக்கூட மாட்டார்கள். தி.மு.கவை ஆதரிக்க ஒரே ஒரு நல்ல காரணம்கூட யாராலும் நிச்சயமாகக் கூறமுடியாது என்பதையே வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.