டி.ஆர்.எஸ் குண்டர்கள்

தெலுங்கானாவின் நிஜாமாபாத்தில் உள்ள பா.ஜ.க  உறுப்பினரும் எஸ்.டி அணி மண்டல செயலாளருமான படவத் ரவி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது ஆளும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி (டி.ஆர்.எஸ்) கட்சியை சேர்ந்த குண்டர்கள் கொடூர கோலைவெறி தாக்குதலை நடத்தியுள்ளனர். ,  பாதிக்கப்பட்டவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். டி.ஆர்.எஸ் எம்.எல்.சியான பூபதி ரெட்டியின் மகன் பாஜி ரெட்டி ஜெகன் தலைமையில் வந்த ஒரு ரௌடி கும்பல் இந்த தாக்குதலை நட்த்தியுள்ளது. தெலுங்கானாவில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியும் அதன் கூட்டணியில் உள்ள ஒவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியும் இணைந்து அங்குள்ள ஹிந்துக்களை தாக்குவது சமீப காலமாக அதிகரித்துள்ளது. சமீபத்தில் சிவராத்திரியின்போது பைன்சாவில் ஹிந்துக்கள் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியினரால் கொடூரமாக தாக்கப்பட்டதும், வீடு வாகனங்கள் எரிக்கப்பட்டதும் அதனை குறித்து தகவல் சேகரிக்க எந்த ஊடகத்தையும் ஊருக்குள் அனுமதிக்காததும் குறிப்பிடத்தக்கது.