உலக சுகாதார அமைப்பு கவலை

முன்னேறிய நாடுகளில் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் நிலையில், 10க்கும் மேற்பட்ட பின்தங்கிய நாடுகளுக்கு இன்னும் தடுப்பூசி கிடைக்கவில்லை. பின்தங்கிய ஆப்பிரிக்க நாடுகளுக்கும் கரோனா தடுப்பூசிகள் கிடைக்க வேண்டும். ஆப்பிரிக்க நாடுகளுக்கு கரோனா தடுப்பூசியைத் தராவிட்டால் அந்த நாடுகள் மேலும் பின்தங்கிவிடும். அங்கு உயிரைப் பணயம் வைத்து பணி புரிந்து மக்களைக் காப்பாற்றி வரும் டாக்டர்கள், நர்ஸ்களுக்கு தடுப்பூசியைச் செலுத்த வேண்டும்’ என உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.