தி.மு.க போஸ்டர்களை கிழித்த பொதுமக்கள்

பழனி தொகுதியில், காலங்காலமாக தி.மு.கவிற்கு உழைத்த மூத்தவர்களை எல்லாம் ஒதுக்கிவிட்டு திண்டுக்கல் ஐ.பெரியசாமியின் மகனான ஐ.பி.செந்தில்குமார் தி.மு.க சட்டமன்ற வேட்பாளராக போட்டியிடுகிறார். இவர் பிரச்சாரத்திற்கு செல்லும் பொழுது மரியாதை நிமித்தமாக வடகவுஞ்சி அ.தி.மு.க ஊராட்சி மன்ற தலைவி தோழிஆனந்தும் அவரது கணவரும், இவருக்கு பொன்னாடை போர்த்தினர். உடனே, ஐ.பி.செந்தில்குமாரின் ஆட்கள் ‘அ.தி.மு.கவில் இருந்து தோழிஆனந்தும் அவரது கணவரும் தி.மு.கவில் இணைந்து விட்டதாக ஆர்வக்கோளாறில் பதிவிட்டனர். இதனை கேள்விப்பட்ட அந்த கிராமத்து மக்கள் ‘ஸ்டாலின் தான் வாராரு! விடியல் தரப் போராரு’ என்ற தி.மு.க போஸ்டர்களை எல்லாம் கிழித்து போட்டு நாங்கள் எப்பொழுதும் அ.தி.மு.க பக்கம்தான் என நிரூபித்தனர். தமிழகமே தங்கள் பக்கம்தான் என்ற ஒரு போலி மாயையை உருவாக்க, கோடிகளில் செலவு செய்து வருகின்றனர் தி.மு.கவினர். ஆனால் மக்கள் தெளிவாகவே உள்ளனர் என்பதை பல இடங்களில் காண முடிகிறது.