இந்து முன்னணி போராடும்

ராமநாதபுரம் மாவட்டம் கருப்பன்பச்சேரியை சேர்ந்த வளர்மதி என்பவரை அப்பகுதியைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் தொடர்ச்சியாக மதம் மாறச் சொல்லி வற்புறுத்தி வந்தனர். தன்னை தொந்தரவு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கச்சொல்லி பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் வளர்மதி ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சித்தார். இந்நிலையில், வளர்மதியை கட்டாயமாக மதம் மாற்ற முயற்சித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையென்றால் இந்து முன்னணி சார்பாக போராட்டம் நடத்தப்படும் என இந்து முன்னணி அறிவித்துள்ளது.