ததீசியான தமிழ்மணி

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சேர்ந்த 21 வயதான தமிழ்மணி என்ற ஆர்.எஸ்.எஸ் ஸ்வயம் சேவகர், தேவகோட்டை ஒன்றிய இணை உடற்பயிற்சி பொறுப்பாளராக தேசப்பணியாற்றி வந்தார். கடந்த பிப்ரவரி 27ல் அன்று ஒரு விபத்தில் இவர் மூளை சாவு அடைந்தார். அவரது குடும்பத்தார் ஒப்புதலின் பேரில், தமிழ் மணியின் உடல் தானம் செய்யப்பட்டது. அவரது இதயம் விமானம் மூலமாக மதுரையில் இருந்து சுமார் 50 நிமிடங்களில் சென்னை குரோம்பேட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்த 36 வயது பெண்மணிக்கு இதயமாற்று சிகிச்சை மூலம் பொறுத்தப்பட்டு அப்பெண்மணி குணமடைந்தார்.