கோயில்களில் நன்கொடைக்கு தடை

சட்டசபை தேர்தலையொட்டி, கோயில் அறங்காவலர் குழுக்களுக்கு அறநிலையத்துறை சுற்றிக்கை ஒன்றை அனுப்பி உள்ளது. அதன்படி,

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால் கோயில் வளாக சுவர்கள், துாண், வேலி, காம்பவுண்ட்களில் அரசியல் கட்சிகளின் பேனர், போஸ்டர்கள் இருக்கக் கூடாது. புதிய திட்டங்கள், ஆட்கள் தேர்வு, சம்பள உயர்வு, பணியாளர் இடமாற்றம், கோயிலுக்கு சொந்தமான இடங்களிள் புதிய ஒதுக்கீடுகள் கூடாது. கோயில் வளாகத்தில் கட்சியினர் ஓட்டு கேட்பது, துண்டு பிரசுரங்கள் வினியோகிப்பது கூடாது. இதற்கு அறங்காவலர் குழு, அதிகாரிகள், ஊழியர்கள் யாரும் உதவக் கூடாது. முக்கியமாக கோயில் திருப்பணி, அன்னதானம் என்ற பெயரில் நன்கொடை வசூலிக்கக் கூடாது. இதை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த சுற்றிக்கையில் கூறப்பட்டுள்ளது.