மியான்மர் அகதிகள்

மியான்மரில் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியதில் இருந்து அங்கு மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ராணுவம் பலரை அங்கு கொன்றுள்ளது.  தற்போது அந்த நாட்டினை சேர்ந்த எட்டு காவலர்கள் உட்பட இருபது பேர் பாரதத்தின் மிசோரம் மாநிலத்தில் தஞ்சம் புகுந்துள்ளனர். மேலும் பலர் அகதிகளாக மூன்று எல்லை மாவட்டங்களான சம்பாய், செர்ச்சிப், சியாஹா ஆகிய பகுதிகளுக்கு வந்துகொண்டுள்ளனர்.