சுவிஸ் தூதர் பாராட்டு

பாரதத்திற்கான சுவிட்சர்லாந்து நாட்டின் தூதர் டாக்டர் ரால்ப் ஹெக்னர், முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்து பேசினார். அப்போது, பாரதத்தில் மிகவும் வேகமாக வளரும், முதலீட்டுக்கு ஏற்ற ஒரு முன்னோடி மாநிலமாக உத்தரபிரதேசம் திகழ்வதாக கூறி பாராட்டு தெரிவித்தார். மேலும் கொரோனாவை மிகச்சிறப்பாக அம்மாநிலம் கட்டுப்படுத்தியது, நொய்டா கிரீன்ஃபீல்ட் சர்வதேச விமான நிலையத்தின் வளர்ச்சி, சுவிஸ் உள்ளிட்ட நாடுகளின் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் உ.பியில் உள்ள வாரணாசி, அயோத்தி, மதுரா, பிரயாகராஜ் போன்ற புனித நகரங்கள் குறித்தும் தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.