எஸ்.டி.பி.ஐயினர் தாக்குதல்

கேரளாவில் உள்ள கருணாகப்பள்ளியில், பா.ஜ.கவினர் மீது முஸ்லிம் அடிப்படைவாத அரசியல் அமைப்பான எஸ்.டி.பி.ஐ கட்சியை சேர்ந்த பயங்கரவாத குண்டர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில், குலசேகரபுரம் பஞ்சாயத்து உறுப்பினரான அஜீஷ் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அஜீஷ் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.  தாக்குதலை கண்டித்து, பா.ஜ.க தொண்டர்கள், வன்முறையில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.