ஸ்டாலினை கலாய்த்த முதல்வர்

தன் சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தில், முதல்வர் எடப்பாடியார், “ஸ்டாலின் கூறுகிறார் நாங்கள் ஆட்சிக்கு வந்து மனுக்களை படித்து உடனே நடவடிக்கை எடுப்போம் என! நீங்க எப்ப ஆட்சிக்கு வர்றது? எப்ப மனுக்களை படிக்கிறது?, நேரடியாக கொடுக்கும் மனுவையே சரியாக படிக்க தெரியவில்லை! இதுல பெட்டியில் போடுற மனுவை என்ன பண்ண போறீங்க? எங்கள் ஆட்சியில் 1100 என்ற எண்ணை அழுத்தினால் மக்கள் குறைகள் நேரடியாக தீர்க்கப்படும் பின் ஏன் மனு? என விளாசினார். மேலும், இதை நான் சொல்லக் கூடாது, இருந்தாலும் வரும் வழியில் என் கழக தோழர்கள் கேட்டார்கள் நீங்கள் ஏன் இதனை கூற மாட்டேன் என்கிறீர்கள் என? ஒரு தலைவரை பற்றி அப்படி பேச கூடாது என நான் இருந்தேன் என கூறினார்.