ஒற்றுமையை குலைக்கும் சுலைமான்

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நகராட்சி தினசரி காய்கறி சந்தை கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக ஹிந்து வியாபாரிகளும் மாற்றுமத வியாபாரிகளும் ஒற்றுமையாக வியாபாரம் செய்து வருகிறார்கள். இதை சீர்குலைக்கும் விதமாக, சில சமூக விரோத கும்பலின் தூண்டுதலால் குறிச்சி நியூஸ் சுலைமான் என்பவர் தினசரி சந்தை குறித்து அவதூறு கருத்துக்களை நீண்ட நாட்களாக பரப்பிவந்துள்ளார். மேலும், நேற்று காலை தனது இருசக்கர வாகனத்தை சந்தையின் பாதையின் குறுக்காக நிறுத்தி மத ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் பேசி கலவரத்தை தூண்ட முற்பட்டார். இது அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியது. கடையநல்லூர் பகுதியில் வாழும் மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்கும் விதமாக செயல்படும் சுலைமான் போன்றவர்கள் மீது காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுத்து அமைதியை நிலைநாட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.