எம்.எல்.ஏக்களுக்கு மத்திய படை பாதுகாப்பு

மேற்கு வங்க சட்டசபைத் தேர்தலில் வெற்றிபெற்ற 77 பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகத்திடம் பாதுகாப்பு அமைப்புகள் தெரிவித்துள்ளன. அந்த மாநிலத்தில் தேர்தலுக்குப் பின்னர் நடைபெற்ற வன்முறை சம்பவங்கள் குறித்து ஆய்வு செய்ய சென்ற உயர்நிலைக் குழுவும் இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்திடம் சில பரிந்துரைகளை வழங்கியுள்ளது. இதையடுத்து அந்த மாநிலத்தில் அனைத்து பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் மத்திய தொழிலக பாதுகாப்புப் படை (சி.ஐ.எஸ்.எப்), மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படை (சி.ஆர்.பி.எப்) மூலம் பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்த மாநில எதிர்க்கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள பா.ஜ.கவின் சுவேந்து அதிகாரிக்கு ஏற்கெனவே ‘இசட்’ பிரிவின் கீழ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. தற்போது, 61 எம்.எல்.ஏ.,க்களுக்கு ‘எக்ஸ்’ பிரிவு பாதுகாப்பும், 15 எம்.எல்.ஏ.,க்களுக்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்படவுள்ளது.