பள்ளிப் புத்தகத்திலும் மதவெறி

ஆந்திராவில், கிறிஸ்தவரான ஜெகன் மோகன் ரெட்டி முதல்வராக பதவியேற்றது முதல், அங்கு ஹிந்துக்கள் மீதான தாக்குதல், கோயில்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துவிட்டன. கட்டாய மதமாற்றமும் வெகு ஜோராக நடக்கிறது. தற்போது அங்கு சிறிய குழந்தைகள் மனத்தில் நஞ்சை விதைக்கும் விதமாக, அங்கன்வாடி மையத்தின் பாடப்புத்தகத்தில் உள்ள ஒரு படத்தில், தேவாலயம், மசூதி இடம்பெற்றுள்ளன. ஆனால் கோயில் குறித்த படம் ஏதும் அதில் இடம்பெறவில்லை. இது, ஆந்திர மாநில கல்வித் துறையில் உள்ள கிறிஸ்தவ மிஷனரி, இஸ்லாமிய அமைப்புகளின் ஆதிக்கத்தையே காட்டுகிறது.