சபரிமலை நடை திறப்பு

 மலையாள மாதமான எடவம் தொடக்கத்தை முன்னிட்டு, கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் நேற்று முதல் ஐந்து நாட்களுக்கு மீண்டும் திறக்கப்படும் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்தது. மேலும், இந்த ஐந்து நாட்களிலும் மாதாந்திர பூஜைகள், சம்பிரதாய சடங்குகள் செய்யப்படும். தற்போது கொரோனா இரண்டாம் பரவல் வேகமெடுத்திருப்பதால் பக்தர்கள் பார்வையிட அனுமதிக்கப்பட மாட்டார்கள். கோயிலில் பிற விழாக்கள் எதுவும் நடைபெறாது எனவும் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.