ரெம்டெசிவர் – அரசை அணுகலாம்

கொரோனா நோயாளிக்கு அவசரத்தேவையாக வழங்கப்படும் ரெம்டெசிவர் மருந்துக்கு தமிழகத்திலும் தட்டுப்பாடு நிலவுகிறது. பாதிக்கப்படும் அனைத்து கொரோனா நோயாளிகளுக்கும் ரெம்டெசிவிர் மருந்து வழங்க வேண்டியது அவசியமில்லை என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. எனினும், தமிழக அரசிடம் தேவையான அளவில், ரெம்டெசிவர் மருந்து கையிருப்பில் உள்ளது. தனியார் மருத்துவ மனைகளில் உள்ள நோயாளிகளுக்கு, மருந்து தேவைப்பட்டால், அதற்கான மருத்துவ ஆவணங்களுடன், தமிழக மருத்துவ பணிகள் கழகத்தை அணுகலாம் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.