கர்ப்பிணி காவல் அதிகாரிக்கு பாராட்டு

சத்தீஸ்கரில், கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல், கர்ப்பிணியான போலீஸ் டி.எஸ்.பி ஷில்பா, முக கவசம் அணிந்தவாறு லத்தியுடன் சாலையில் நின்று பணியில் ஈடுபட்டு வருகிறார். வாகனங்களில் வருவோரிடம் கொரோனா வழிமுறைகளை முறையாக பின்பற்றவும் அறிவுறுத்தி உள்ளார். அவருடன் சில காவல் அதிகாரிகளும் நிற்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியது. அந்த காவல் அதிகாரிக்கு பொதுமக்கள் பெரும் வரவேற்பும் பாராட்டுகளும் தெரிவித்துள்ளனர்.