ரதயாத்திரை நீதிமன்றம் உத்தரவு

‘ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ர’ அறக்கட்டளை சார்பில், அயோத்தியில் ஸ்ரீராமருக்கு கோயில் கட்டும் பணிக்காக, உலகம் முழுவதும் நிதி சேகரிக்கப்படுகிறது. இது குறித்து மதுரை மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த ரதயாத்திரை ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கு மதுரை போலீஸ் கமிஷனர் அனுமதி மறுத்தார். இதனை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு அனுமதி பெறப்பட்டது. எனினும், ரதயாத்திரைக்கு கமிஷனர் அலுவலகம் அனுமதியளிக்கவில்லை. ரதயாத்திரையை தடுத்து நிறுத்தியது காவல்துறை. இதனால், மதுரை போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்ஹா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்’ என மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதி, மார்ச் 1ல் போலீஸ் கமிஷனர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும்’ என உத்தரவிட்டார்.