ஸ்டாலினுக்கு எதிராக புகார்

அருந்ததியர் சமூக எம்.பி.,க்கு உரிய கௌரவம் வழங்காமல், மேடைக்கு கீழ் அமர வைத்து அவமதித்த ஸ்டாலினுக்கு எதிராக., பா.ஜ.க மூத்த தலைவர் ம.வெங்கடேசன், தேசிய எஸ்.சி ஆணையத்தில் புகார் அளித்துள்ளார். சுயமரியாதை, சமநீதி, என்று தமிழக மக்களுக்கு பாடம் எடுக்கும் தி.மு.க தலைமை, தனது சொந்த கட்சி எம்.பியிடமே தீண்டாமையை கடைப்பிடித்தது குறித்து அக்கட்சியினரோ அல்லது கூட்டணியினரான காங்கிரஸ், வை.கோ, விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் தோழர்களோ யாரும் கண்டிக்காமல் இன்று வரை மெளனம் காத்து வருகின்றனர்.