முகேஷ் அம்பானியை கொல்ல சதியா

ரிலையன்ஸ் நிறுவன அதிபர் முகேஷ் அம்பானியின் வீடு ‘ஆன்டிலியா’ மும்பை, பீடார் சாலையில் உள்ளது. இவரது வீட்டின் வெளிவளாகத்தில் பந்தயத்திற்கு பயன்படுத்தப்படும் கார் யாருமின்றி நின்றிருந்தது. வீட்டின் காவலர்கள் அளித்த தகவலையடுத்து, காவல்துறையினர் காரை சோதனை செய்தனர். அப்போது, காரில் வெடி பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு  சோதனை நடத்தப்பட்டது. மஹாராஷ்டிரா உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக், உரிய விசாரணை நடத்தி அறிக்கை தருமாறு மும்பை குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.