ஸ்ரீராமர் கோயில் நன்கொடை

உத்தர பிரதேசம், அயோத்தியில் அமையவுள்ள பிரம்மாண்டமான ஸ்ரீராமர் கோயில் கட்டுவதற்கான நிதி சேகரிப்பு சில மாதங்களுக்கு முன் தேசமெங்கும் நடைபெற்றது. இதில், இதுவரை சுமார் 5,000 கோடி ரூபாய் வசூலாகியிருக்கலாம் என கூறப்படும் நிலையில், வங்கி காசோலைகளாக வசூலிக்கப்பட்ட 15,000 காசோலைகள், தொழில்நுட்ப கோளாறு, கணக்கில் பணம் இல்லை, என பல்வேறு காரணங்களால் திரும்ப வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த காசோலைகளின் மதிப்பு, ரூ. 22 கோடி இருக்கலாம் என கூறப்படுகிறது. தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக திரும்பி வந்த காசோலைகளை மட்டும் மீண்டும் வங்கியில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.