கத்தோலிக்க நிர்வாகம் அறிவுரை

குஜராத், அகமதாபாத்தில் கொரோனா பாதிப்பு தினமும் அதிகரித்து வருகிறது. இதனால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அகமதாபாத்தில் உள்ள மயானங்களில் உடல்களை அடக்கம் செய்ய போதிய இடம் இல்லை. இதனால். அகமதாபாத் திருச்சபைகளை நிர்வகிக்கும் அமைப்பான கத்தோலிக்க டயோசீஸ், தங்கள் சபையை சார்ந்த மக்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. அதில், ‘கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் உடல்களை எரியூட்டுமாறு அறிவுறுத்துகிறோம். இதுபோன்ற பேரிடர் காலத்தில் வேறு வழியின்றி இதனை செய்வதால், எந்த விதத்திலும் இறந்தவர்களின் இறை நம்பிக்கையை இது பாதிக்காது’ என கூறப்பட்டுள்ளது.