இரங்கல்…!

சிந்தனை மிகுந்த கருத்துகளால் தமிழ்த் திரையுலக ரசிகர்களைச் சிரிக்க வைத்த நடிகர் விவேக் அவர்களின் மறைவு ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. திரைப்படங்களில் மட்டுமின்றி நிஜ வாழ்க்கையிலும் சமூக அக்கறையை அவர் வெளிப்படுத்தியுள்ளார். சுவாமி விவேகானந்தர், மறைந்த குடியரசுத் தலைவர் ஏபிஜெ அப்துல் கலாம் ஆகியோரின் பாதையைப் பின்பற்றிய நடிகர் விவேக் மரக்கன்று நடுதல், சுகாதார விழிப்புணர்வு முதலான பல்வேறு சமூகப் பணிகளை ஆற்றியுள்ளார்; அது மட்டுமின்றி, தனது ரசிகர்களையும், பொதுமக்களையும் அந்தப் பணிகளில் ஈடுபடுத்த ஊக்குவித்தார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்புகூட கொரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திய பிறகே நம்மை விட்டு பிரிந்துள்ளார்.

தெய்வ நம்பிக்கையும்ஹிந்து தர்மம் குறித்த விசாலமான அறிவும் நடிகர் விவேக் அவர்களுக்கு இருந்ததுமத்திய அரசின் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு அனைத்துத் தரப்பினரையும் சென்றடைய வேண்டும் என்ற ஆவலை வெளிப்படுத்தியுள்ளார்அவரது திடீர் மறைவு தமிழ்த் திரையுலகத்திற்கும்மாநில மக்களுக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்அவரது குடும்பத்தினருக்கு விஜயபாரதத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.