ஜின்னாவின் பாதையில் ராகுல்

அசாம் மாநிலத்தில் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர்களை ஆதரித்து மூத்த தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக மத்தியபிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் பிரசார கூட்டத்தில் பங்கேற்று பேசினார். அப்போது, அவர் பேசுகையில், ‘ராகுல் காந்தி மகாத்மா காந்தியின் பாதையில் நடக்கவில்லை, ஜின்னாவின் பாதையில் நடக்கிறார். ஜின்னாவின் பாதையை பாரத மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. அசாமில் பசி, வேலையின்மை மற்றும் வறுமையை காங்கிரஸ் வழங்கியது. அவர்களின் ஆட்சியில் அசாம் வளர்ச்சி பெறவில்லை. ஆனால் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சர்பானந்தா சோனோவால் தலைமையில், அசாம் வளர்ச்சியின் பாதையில் முன்னேறத் தொடங்கியுள்ளது. ஒருபுறம், ராகுல் கடலில் டைவிங் செய்கிறார். மறுபுறம், பிரியங்கா தேயிலை தோட்டங்களில் தேயிலை இலைகளை பறித்துக்கொண்டிருக்கிறார். நீங்கள் என்ன தேயிலை இலைகளைப் பறித்தீர்களா அல்லது ஒரு படத்தின் படப்பிடிப்பில் இருந்தீர்களா? என கேள்வி எழுப்பினார்.