தபால் ஓட்டு விண்ணப்பம்

தமிழகத்தில், தபால் ஓட்டுப்போட நேற்றுவரை சுமார் 2.44 லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது. காவல்துறையை சேர்ந்த 2,770 பேர், தேர்தல் பணியில் ஈடுபடும் 33,189 பேர், அத்தியாவசிய சேவையில் ஈடுபட்டுள்ள 35 பேர், 49,114 மாற்றுத்திறனாளிகள், 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் 1,59,849 பேர் இதில் அடங்குவர்.