குழந்தையை மீட்ட காவல்துறை

திருச்சியில், திருச்சி – சென்னை ‘ஒய்’ சாலையில் பெற்றோரின் கவனக் குறைவால் விட்டுச்  செல்லப்பட்ட 2 வயதுடைய ஆண் குழந்தையை உதவி ஆய்வாளர் மேகலா தலைமையிலான காவலர்கள் மீட்டு அதன் பெற்றோரிடம் சேர்ப்பித்தனர். அவர்களை பாராட்டி, மாவட்ட காவல் கண்காளிப்பாளர் மயில்வாகனன் பரிசு வழங்கினார்.