பி.எப்.ஐ பயங்கரவாதிகள் கைது

உத்தரபிரதேசக் காவல்துறையின் சிறப்பு அதிரடிப்படையினர் அன்சாத் பத்ருதீன், பிரோஸ் கான் ஆகிய இரண்டு பயங்கரவாதிகளை கைது செய்துள்ளது. அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர்கள் உத்தரபிரதேசத்தின் பல பகுதிகளில் குண்டுவெடிப்புகளை மேற்கொள்வது, உ.பியில் தங்கள் தளத்தை விரிவுபடுத்துதல், ஹிந்து அமைப்பு தலைவர்களை கொல்வது போன்ற திட்டங்களுடன் வந்தது கண்டறியப்பட்டது. அவர்களிடம் இருந்து பல முக்கிய ஆவணங்கள், ஏராளமான வெடிபொருட்கள், டெட்டனேட்டர்கள் போன்ற ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. அவர்கள் இருவரும் கேரளாவைச் சேர்ந்தவர்கள். இவர்கள் இருவரும், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா (பி.எப்.ஐ) அமைப்பினர் என உ.பி. காவல்துறை சட்டம், ஒழுங்கு ஏ.டி.ஜி,  பிரசாந்த் குமார் தெரிவித்தார்.