பொறுமை காக்க வேண்டுகோள்

கொரோனா தடுப்பு மருந்துக்காக உலகமே பாரதத்தின் உதவியை எதிர்பார்த்து காத்திருக்கிறது. பாரதத்தின் தேவையே மிகப்பெரிது என்றாலும், நமது மத்திய அரசு, நல்லெண்ண அடிப்படையில், பல அண்டை நாடுகள், ஏழை நாடுகள், ஐ.நா அமைதிப்படைகளுக்கு தடுப்பு மருந்தை இலவசமாக வழங்கி வருகிறது. இந்நிலையில், ‘கோவிஷீல்ட்’ தயாரிப்பு நிறுவனமான ‘சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா’ தலைவர் ஆதர் பூனாவாலா தன் டிவிட்டர் பக்கத்தில், பாரதத்தின் மிகப் பெரிய தேவைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதால், மற்ற நாடுகளும் அதன் அரசாங்கங் களும் பொறுமை காக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.