போதை பொருளுடன் பாகிஸ்தான் படகு

இந்திய கடலோர காவல்படை மற்றும் குஜராத் பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில், ரூ.200 கோடி மதிப்புள்ள 40 கிலோ போதை பொருட்களுடன் பாகிஸ்தான் நாட்டு படகு ஒன்றுவ் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்திய கடலோர காவல் படையின் அதிவேக படகுகளில் சென்ற அதிகாரிகள், ஜகாவு கடற்கரையில் இருந்து 33 நாட்டிகல் மைல் தொலைவில் பாகிஸ்தான் படகை சோதனையிட்டு பறிமுதல் செய்தனர். படகில் இருந்த பாகிஸ்தானியர்கள் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக ஜகாவு அழைத்து செல்லப்பட்டனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.