பாப்பம்மாளிடம் ஆசி பெற்ற மோடி

கோவை, மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டியை சேர்ந்த, 105 வயதான, இயற்கை வேளாண் விவசாயி பாப்பம்மாளுக்கு, சமீபத்தில், பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டது. கோவை வந்த பிரதமர் மோடி, பாட்டி பாப்பம்மாளை, இரு கரம் கூப்பி, தலையை குனிந்து வணங்கினார். பிரதமரின் இருகரங்களை பற்றியும், நெற்றியில் கை வைத்தும், ஆசிர்வாதம் செய்தார் பாப்பம்மாள் பாட்டி. இவர், தி.மு.க.,வை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.