கடல்சார் உச்சி மாநாடு

பாரதப்பிரதமர் மோடி,  ‘பாரத கடல்சார் உச்சி மாநாடு 2021’ ஐ வீடியோ கான்பரன்சிங்கை நேற்று துவக்கிவைத்தார். மூன்று நாட்கள் நடைபெறும் இந்த உச்சி மாநாட்டில், அடுத்த பத்தாண்டுகளுக்கான பாரதத்தின் கடல்சார் வளர்ச்சிகான விஷயங்கள், உலகளாவிய கடல்சார் துறையில் பாரதத்தின் வளர்ச்சி போன்றவை விவாதிக்கப்படுகின்றன. இதில் பல நாடுகளைச் சேர்ந்த நிபுணர்கள் இந்த உச்சிமாநாட்டில் கலந்துகொண்டு பாரத கடல்சார் களத்தில் சாத்தியமான வணிக வாய்ப்புகள், முதலீடுகளை குறித்து ஆராய்வார்கள்.