சன்சத் டி.வி

நாடாளுமன்ற நிகழ்ச்சிகளை லோக்சபா, ராஜ்யசபா என்னும் இரு தொலைகாட்சி சேனல்கள் ஒளிபரப்பி வந்தன. தற்போது அவற்றை ஒருங்கிணைத்து ‘சன்சத் டிவி’ என ஒரே தொலைகாட்சியாக துவங்கப்படும் என மத்திய செய்தி ஒளிபரப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த தொலைகாட்சி சேனல் துவக்க விழா குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சேனலுக்கு பணி நிறைவுப் பெற்ற ஐ.ஏஎ.ஸ் அதிகாரி ரவி கபூர் தலைவராக ஓராண்டுக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.